| 
New Page 1
 
    “குள்ளக் குள்ளனைக் 
குண்டு வயிறனை 
    வெள்ளைக் 
கொம்பனை விநாயகனைத் தொழு” 
    “ வெள்ளைக் 
கொம்பனை விநாயகனைத் தொழத் 
    துள்ளி ஓடும் தொடர்ந்த 
வினைகளே” 
    “ கருணை வள்ளல் கணபதி யைத்தொழ 
    அருமைப் 
பொருள்கள் அனைத்தும் வருமே” 
    “ முப்பழம் வெல்லம் 
மோதகம் தின்னும் 
    தொப்பை அப்பனைத் 
தொழவினை இல்லை” 
    “ வேழ முகத்து விநாயகனைத் 
தொழ 
    வாழ்வு மிகுத்து 
வரும்.” 
என்னும் பாடல்களாலும், 
    The Elephant 
Head of Ganesha is a symbolical representation of victory.  Hence at the 
commencement of every undertakings the orthodox Hindu offers prayers to the god 
to bless him with success. 
                                        - War in Ancient India. 
வரிகளாலும் நன்கு உணரலாம.் 
விநாயகனே வெவ்வினையை 
வேர்அறுக்க வல்லான் 
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே 
விண்ணிற்கும் மண்ணிற்கும் 
நாதனுமாம் தன்மையினால் 
கண்ணில் பணிமின் கனிந்து. 
என்று  கபில  நாயனாரும்  அறிவித்திருத்தலைக்  காண்க.    கணபதி    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதன் ஆதலின் ஜாவா, ஜப்பான், 
சைனா, நேபாளம், போன்ற இடங்களிலும் அவர் வடிவம் இருத்தல் கொண்டு உணரலாம். 
    விநாயகர் பேருருப்பண்ணவன் 
என்பது சேக்கிழார் வாக்காகிய “ நீள் முடிக் கடக்களிறு” என்று கொண்டும் தெரியலாம். 
 |