பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

91

    விநாயகர் புராணம்  “ ஊறுகள் நீக்கித் துணிவற முடிவு போக்கிடுமாறு சூழ்தர வல்லவன் அமைச்சன்  “  என்றும்,  “ இறைவனுக்கு சுகிதம் எண்ணும் மந்திரியும் “ என்றும்,

        அறிவதும் செயலும் ஒழிவதும் அரசர்க்
            காக்கமே குறித்தன ஆகும்
        திறனும்நன் றறியா அரசருக் குறுதி
            செப்பலும் செய்வன வேனும்
        அறும்உல கியற்கைக் கொத்திடின் செயலும்
            ஒருவினைக் கியைந்தபல் செயலும்
        நிறுவவ தொன்றால் வாய்ப்பஎஞ் ஞான்றும்
            நிகழ்த்தலும் அமைச்சருக்கு இயல்பாம்

என்றும் கூறுதல் காண்க.

        தோலாமொழித்தேவர் செய்த சூளாமணியில்,
            தெறிந்தவர் தெளிந்த நூலாம்
        சிறந்தன தெரிந்து கூறி
            அறிந்தவை ஆற்ற நிற்கும்
        அமைதியான அமைச்சன் ஆவான்

என்றும்,

        மறற்வர்க் குறுதி நோக்கி
            வருவழி வழிகள் தூரச்
        செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி
            தெருண்டவர் கண்ட தன்றே

என்றும் அறிவித்தல் காண்க : 

    பழமொழிகள் நானூறு,

    “ உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்
    குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் குறுத்தல்
    மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர்
    அலைத்தும்பால் பெய்து விடல் “ என்றும்,

    மூரித்தேன் தாரி னாய்நீ முனியினும் உறுதி நோக்கிப்
    பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கது வாதல்
                                       கண்டே

என்று சீவக சிந்தாமணியும்,