தந

68

மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு

      தந்தையே தந்தைஉனைத் தான்படிக்க

        வைத்தவனே தமிழுக் காசான்

      சுந்தரமா மதிவதனா மீனாட்சி

        சுந்தரனே துலங்கு மாலே

                              - அட்டாவதானம் வேலாயுதக் கவிராயர்

      மலையமுனி தவப்பேறோ கலைமகளின் தவப்பேறோ

        மறிநீர் வைப்பில்

     தலைமைபெறும் இவன்சனனம் எனப்பலபிள்

        ளைத்தமிழைச் சாற்றும் வல்லோன்

     குலைவில்புகழ் மீனாட்சி சுந்தரநா வலர்ஏறு

        குடந்தை மேய

     மலைமகள்மேல் ஒருபிள்ளைத் தமிழ்உரைத்த

        தொருவியப்போ மதிமிக் கீரே

                                             - சின்னசாமிப் பிள்ளை

      இப்புவிசெய் தவந்தானோ தந்தைதாய்

        செய்தவமோ இசைத்த ஆசான்

     செப்பமுடன் செய்தவமோ மீனாட்சி

        சுந்தரவேள் செனனம் ஆகி

     ஓப்பிலுயர் கல்வியும்சற் குணமும்நிறைந்

        தகிலாம்மை உபய பாத

     வைப்பிலன்பால் இனியபிள்ளைத் தமிழ் உரைத்தான்

        புலவரெலாம் மகிழத் தானே

                                  - திரிசிரபுரம் விரராகவ செட்டியார்

         இத்தகைய பேரறிவுப் பெருங் கடலாக விளங்கிய திரு. பிள்ளை அவர்கள் 1876-ஆம் ஆண்டு, பிப்பிரவரித் திங்கள் தமது 61-ஆம் ஆண்டு அம்மை அப்பனது அடிமலர் இணைகளில் இணைந்து இன்புறலாயினர். திரு பிள்ளை அவர்களின் முழுவரலாற்றைக் காணவிழைவார் இவரது மாணவரான மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே.  சுவாமிநாதய்யர் எழுதியுள்ள விரிவான நூலி்ல் கண்டு தெளியலாம்

--------