தந
68 |
மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு |
தந்தையே தந்தைஉனைத்
தான்படிக்க
வைத்தவனே தமிழுக்
காசான்
சுந்தரமா மதிவதனா
மீனாட்சி
சுந்தரனே துலங்கு
மாலே
- அட்டாவதானம் வேலாயுதக் கவிராயர்
மலையமுனி தவப்பேறோ
கலைமகளின் தவப்பேறோ
மறிநீர் வைப்பில்
தலைமைபெறும் இவன்சனனம்
எனப்பலபிள்
ளைத்தமிழைச்
சாற்றும் வல்லோன்
குலைவில்புகழ்
மீனாட்சி சுந்தரநா வலர்ஏறு
குடந்தை மேய
மலைமகள்மேல்
ஒருபிள்ளைத் தமிழ்உரைத்த
தொருவியப்போ
மதிமிக் கீரே
- சின்னசாமிப்
பிள்ளை
இப்புவிசெய் தவந்தானோ
தந்தைதாய்
செய்தவமோ
இசைத்த ஆசான்
செப்பமுடன் செய்தவமோ
மீனாட்சி
சுந்தரவேள் செனனம்
ஆகி
ஓப்பிலுயர் கல்வியும்சற்
குணமும்நிறைந்
தகிலாம்மை
உபய பாத
வைப்பிலன்பால்
இனியபிள்ளைத் தமிழ் உரைத்தான்
புலவரெலாம்
மகிழத் தானே
- திரிசிரபுரம் விரராகவ
செட்டியார்
இத்தகைய பேரறிவுப்
பெருங் கடலாக விளங்கிய திரு. பிள்ளை அவர்கள் 1876-ஆம் ஆண்டு, பிப்பிரவரித் திங்கள் தமது
61-ஆம் ஆண்டு அம்மை அப்பனது அடிமலர் இணைகளில் இணைந்து இன்புறலாயினர். திரு பிள்ளை அவர்களின்
முழுவரலாற்றைக் காணவிழைவார் இவரது மாணவரான மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சுவாமிநாதய்யர்
எழுதியுள்ள விரிவான நூலி்ல் கண்டு தெளியலாம்
--------
|