அன

 

மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு

67

     அன்னவன்பேர் மீனாட்சி சுந்தரநா

        வலவன்என ஆய்ந்தோர் யாரும்

     பன்னுபுகழ் பூதலமும் மீதலமும்

        பாதலமும் பரவ நின்றோன்

                   - திருவாவடுதுறை ஆறுமுக சுவாமிகள்.

      பெற்றாருள் நின்னைப்பெற் றார்போல்பெற்

        றார்களும் பேண்பிறப்பை

     உற்றாருள் நின்தனைப் போலஉற்

        றார்களும் உன்அருளை

     நற்றா ரணியுள் எனைப்போல்பெற்

        றார்களும் நாடுறினும்

     மற்றாற்முற் றோர்தரும் மீனாட்சி

        சுந்தர மாமணியே

                    - தியாகராய செட்டியார் 

     சிரபுரக்கோன் மீனாட்சி சுந்தரவேள்

        தன்பெயரின் சீர்மைக் கேற்ப

     வரனுறுநல் பிரபந்த விடயத்தும்

        உயர்ந்தெல்லாம் வல்லோன் ஆனான்

     தரைமிகுநல் காவைஅகி லாண்டவல்லி

       மேல்பிள்ளைத் தமிழைச் செய்தல்

     ஒருபெருமை யோஅவற்குத் தேவிபரம்

        ஆதலினால் உயர்ந்த தாமே

                     - மழவை மகாலிங்கையர்

      நலம்விளக்கும் மீனாட்சி சுந்தரமால்

        ஒருகோவை நவின்றான் சண்பைத்

     தலம்விளக்க அவற்குநாம் புரிகைம்மா

        றெவன் அழியாத் தனமே கங்கா

     குலம்விளக்கும் கற்பகமே குருமணியே

        திருவணியே குணக்குன் றேஇந்

     நிலம்விளக்கும் தினகரனே என அவனை

        வாழ்த்திடுவாய் நிதமும் நெஞ்சே

                    - குளத்தூர். வேதநாயகம் பிள்ளை

 

     கந்தவே ளோஅலது கலைமகளோ

        இவ்வுருக்கொண் டாய்காண் நின்னை

     அந்தநாட் டவரும்இருந்து புலவோருக்

        கரசுசெய்ய அன்பால் பெற்ற