| நீதி நூல் |
| விரிந்து உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பில்லாத முழுமுதல்வனுடைய சினத்துக்கு அஞ்சாது, நல் அறிவில்லாத கீழோர்க்கு அஞ்சிப் பொய் கூறுதல், தெய்வத்தினும் மக்கள் மேன்மையுள்ளவர் என்று நினைத்து நடப்பதை ஒக்கும். |
| வியன்-விரிந்த. வீற்றிருக்கும்-சிறப்புடனிருக்கும். ஓர்-ஒப்பில்லாத. முனிவு-சினம். அநுத்தம்-பொய். கயம்-மேன்மை. |
| 11 |
| அதி- 16--களவு |
| நினைத்தல் செய்தல் நிறையிற் குறைவுங் களவே |
208 | களவு செய்குதன் மனத்தினில் நினைக்குதல் கவரென்று உளம கிழ்ந்துப தேசித்தல் உதவிசெய் தொழுகல் வளமி லாப்பொருண் மாறுதன் மிகுவிலை வாங்கல் அளவி னும்நிறை தனினும்வஞ் சித்தப கரித்தல். | |
| களவு செய்தல், செய்ய நினைத்தல், செய்யென்று வழி சொல்லிக் கொடுத்தல், துணைபோதல், பழுதான பொருளை விற்றல், கூடின விலை வாங்குதல், அளத்தல் நிறுத்தல் முதலியவற்றில் ஏமாற்றிக் கொள்ளையிடல் களவின்பாற் படுவன. |
| கவர்-களவுசெய். |
| 1 |
| பேராசை கூலி குறைத்தல் பெருங் களவே |
209 | கண்டெ டுத்தவோர் பொருளனு பவித்தலுங் களவின் பண்டம் வாங்கலும் வாங்கிய கடன்கொடாப் பழியும் மண்டும் வண்பொரு ளாசையாற் பொய்வழக் கிடலுந் தொண்டு செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும். |
|
| கண்டெடுத்த பிறன்பொருளைக் கொண்டு துய்த்தலும், களவு முறையாக நுகர்பொருளை வாங்கலும், பெற்ற கடனைத் திரும்பக் கொடாமையும், பேராசையால் இல்லாத வழக்கைத் தொடர்தலும், கூலியைக் குறைத்துக் கொடுத்தலும் களவாம். |
| அனுபவித்தல்-துய்த்தல்; அழுந்தியறிதல். |
| 2 |