பக்கம் எண் :

265

  இணைப்பு
 பின்கிடைத்த வேறு படிகளில் காணப்பெறும் பாடல்கள்
 

பாயிரம்

 

       பாட்டறு நூறும் பகர்ந்தேன் எனக்கே

537
தனக்குத்தா னொருவன் போதம்
   சாற்றிடிற் குறைபி றர்க்கென்
எனக்கவிர் நீதி நூனாற்
   பத்துநான் கதிகா ரங்கள்
இனக்கவி யறுநூ றாய
   இனையநூ லயலார்க் கன்றென்
மனக்கியான் உணர்த்து கின்றேன்
   மற்றெனை முனிவர் யாரே.
  ஒருவன் தானே திருந்தி நன்னெறிச் செல்லவேண்டும். அதன் பொருட்டுத் தனக்குத்தானே அறிவு கூறிக்கொள்கிறான்; அதனால், பிறர்க்கு உண்டாகும் குறைவு ஒன்றுமின்று. அதுபோல், என் அகவிருள் அகன்று அறிவொளி விளங்குதற்குப் படலம் (அதிகாரம்) நாற்பத்துநான்கும், செய்யுள் அறுநூறும் சேர்ந்த இந் நீதிநூலைக் கூறினேன். அயலவர் பொருட்டு அன்று இந் நூல்; அதனால், என்னை முனிபவர் ஒருவரும் இலர்.
  போதம்-அறிவு. அவிர்-விளக்கம்.
 

1

  இருள்வேட்டு வெண்மையை ஏசலென் பாற்சினம்
538
மண்கவி மாந்தர் யாரு மறைவின்றி யுணரும் வண்ணம்
வெண்கவி புனைந்தே னென்னை வெகுளுத லிருளை வேட்டு
விண்கவி மதியைப் பாலை வெள்ளியை வெண்ப டாத்தைக்
கண்கவி வயிர முத்தைக் கவுரமென் றுடற்றல் போலும்.
  நிலவுலகத்துச் சூழ்ந்து வாழும் மக்கள் எல்லாரும் வெளிப்படையாக உணரும்படி இந் நீதி நூலை எளிய செய்யுட்களால் பாடினேன.் அதனால், என்னை யாரும் வெகுளார்