பக்கம் எண் :

9

வேல்பாயுங் களிற்றரசர் மேன்மேலும் விருப்பமுற
   விளங்கி யின்பச்
சால்பாயுங் கடவுளடிக் கீழுறைவ ரெந்நாளுந்
   தவிரார் தாமே.
நூலியற்றி யீதலொன்றே யுள்ளதெனக் கொள்ளலைபன்
   னூலு மோர்நம்
மாலியற்றிக் கொடுத்திடுமைந் திணைக்கோவை யேற்றனையா
   லளவி லாத
சேலியற்று புனற்குளத்தூர் வேதநா யகமகிபா
   சிறப்புச் செய்யுள்
பாவியற்ற லேற்றலிவை யிரண்டுநீ யெப்போதும்
   பயிலு வாயே.
 
வேறு
ஆயபுவி யாளுமாங் கிலேயமன்ன ராண்டோ
   ராயிரத்தொண் ணூற்றியைம்பத் தொன்பதனுக் கொத்த
தூயபுகழ் காளயுத்தி யாண்டுறுதைத் திங்க
   டொகுதஞ்சைச் சுபாசீகா ழித்தாலூ காவின்
மேயமுன்சீ பதிகாரஞ் செலுத்திடுநன் னாளின்
   விளங்குகுளத் தூர்ச்சவரி முத்துமகி பாலன்
நேயவரோ தயன்வேத நாயகப்பேர்க் குரிசில்
   நீதிநூ லியற்றியரங் கேற்றினன்நன் குறவே.
______