பக்கம் எண் :

174சித்தர் பாடல்கள்

23.வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
     மானிடவாழ்வென வாழ்வென நொந்து-
  
24.விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
     ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
     நம்பும் அடியேனை இனி ஆளுமே!