பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்175


3. பாம்பாட்டிச் சித்தர்பாடல்

     பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய
விஷமுள்ள  பாம்பும்  இவர்  கண்  பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச்
செல்ல  முடியாது.  பக்கத்திலுள்ள  காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று
இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.

     இரவு  நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டு
காட்டினுள்  நடந்து  கொண்டிருந்த   பாம்பாட்டியின்  எதிரே  பிரகாசமான
ஒளியுடைய   பாம்பொன்று  மெல்ல  ஊர்ந்து  கொண்டு  சென்றது.  அதன்
அழகில்,  அதன்  ஒளியில்  ஆட்பட்டு  அதனைப்  பிடிக்கவும்  செய்யாமல்
பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

     தேடிப்போன  புதையலைக்  கண்ணெதிரே   கண்டுங்கூடக்  கைப்பற்ற
முடியாதவராகி  ஏதோ  சிந்தைனையில்  அப்படியே  ஆடாமல் அசையாமல்
நின்றார்.   கொஞ்ச   நேரத்தில்   அந்தப்   பாம்பு  தவயோகி  ஒருவராக
வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர்.

     இந்த சட்டைமுனி சித்தர்  அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக   நிலையாமையைக்  கூறினார்.  பின்னர்  அவருக்குத்  தீட்சையளித்து
மறைந்தார்.

     நடந்தது   கனவா!  நினைவா!  என்று  திகைத்து  நின்ற  பாம்பாட்டி
மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு
அரசன் மரணமடைந்து