பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே. | 11 |
| | |
கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப் பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத் தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே. | 12 |
| | |
கண்ணிகள் மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே. | 13 |
| | |
சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ், சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே. | 14 |
| | |
ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே. | 15 |
| | |
ஓசையுள்ள டங்குமுன்னந் தாண்ட வக்கோனே - மூல ஓங்காரங் கண்டறிநீ தாண்ட வக்கோனே. | 16 |
| | |
மூலப் பகுதியறத் தாண்ட வக்கோனே - உள்ளே முளைத்தவேர் பிடுங்கேடா தாண்ட வக்கோனே. | 17 |
| | |
சாலக் கடத்தியல்பு தாண்ட வக்கோனே - மலச் சாலென்றே தேர்ந்தறிநீ தாண்ட வக்கோனே. | 18 |
| | |
பற்றே பிறப்புண்டாக்குந் தாண்ட வக்கோனே - அதைப் பற்றா தறுத்துவிடு தாண்ட வக்கோனே. | 19 |
| | |
சற்றே பிரமத்திச்திசை தாண்ட வக்கோனே - உன்னுள் சலியாமல் வைக்கவேண்டுந் தாண்ட வக்கோனே. | 20 |
| | |
அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே. | 21 |
| | |
செவிதனிற்கே ளாதமறை தாண்ட வக்கோனே - குரு செப்பில் வெளி யாமல்லவோ தாண்ட வக்கோனே. | 22 |