கட்டளைக் கலித்துறை மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும் வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும், தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே. | 23 |
| | |
நேரிசை வெண்பா போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம், மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம், வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால், ஓதுபிர மத்துற்றக் கால். | 24 |
| | |
தாண்டவராயக்கோன் கூற்று தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே ஆனந்தக் கோனாரே - அருள் ஆனந்தக் கோனாரே. | |
| | |
ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன் அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன் மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன். (தாந்) | 25 |
| | |
அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும் அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும் சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன் சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன். (தாந்) | 26 |
| | |
மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன் ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே. (தாந்) | 27 |
| | |
பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன் பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன் | |