பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்223


சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
     சந்தோஷ மாகவே கூவுகுயிலே.
83
  
உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
     உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
     பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.
84
  
சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
     தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
     மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.
85
  
எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
     ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
     நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.
86
  
              மயிலொடு கிளத்தல்

ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
     ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
     குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
87
  
இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
     இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
     நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
88
  
கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.
89
  
              அன்னத்தொடு கிளத்தல்

சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.
90