சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை சந்தோஷ மாகவே கூவுகுயிலே. | 83 |
| | |
உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள் உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே. | 84 |
| | |
சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத் தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே. | 85 |
| | |
எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம் ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே. | 86 |
| | |
மயிலொடு கிளத்தல் ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள் ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங் குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே. | 87 |
| | |
இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே. | 88 |
| | |
கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும் காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே பற்றூ டுருவவே பாயுமயிலே அகப் பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே. | 89 |
| | |
அன்னத்தொடு கிளத்தல் சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும் மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே. | 90 |