பக்கம் எண் :

222சித்தர் பாடல்கள்

சித்தத்தொடு கிளத்தல்

கண்ணிகள்

அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
     மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
     மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.

77
  
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
     ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.
78
  
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
     அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
     தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.
79
  
மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
     முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
     செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.
80
  
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
     பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை
     வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற.
81
  
எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல
     கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
     அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற.
82
  
           குயிலொடு கிளத்தல்

கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
     காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.