சித்தத்தொடு கிளத்தல் கண்ணிகள் அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர மானந்தங் கண்டோமென்று தும்பீ பற மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற. | 77 |
| | |
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ் சோதியைக் கண்டோமெனத் தும்பீபற. | 78 |
| | |
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை அருவே பொருளாமெனத் தும்பீபற செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற. | 79 |
| | |
மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர முத்திநிலை சித்தியென்றே தும்பீபற தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த செகத்தை யொழித்தோமென்று தும்பீபற. | 80 |
| | |
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப் பற்றற்றோ மென்றேநீ தும்பீபற வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற. | 81 |
| | |
எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல கெல்லாம் அழியுமென்றே தும்பீபற அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும் அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற. | 82 |
| | |
குயிலொடு கிளத்தல் கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே. | |