தேக மிழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென், யோகமட்டுஞ் செய்தாலென் யோசிப்பாய் கன்மனமே. | 65 |
| | |
சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே. | 66 |
| | |
அறிவொடு கிளத்தல் எல்லாப் பொருள்களையு மெண்ணப் படிபடைத்த வல்லாளன் றன்னை வகுத்தறிநீ புல்லறிவே. | 67 |
| | |
கட்புலனுக் கெவ்வளவுங் காணா திருந்தெங்கும் உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே. | 68 |
| | |
விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்க முண்டாகும், செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்ததறிநீ புல்லறிவே. | 69 |
| | |
மெய்யிலொரு மெய்யாகி மேலாகிக் காலாகிப் பொய்யிலொரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. | 70 |
| | |
ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே கூத்துப் புரிகின்ற கோளறிவாய் புல்லறிவே. | 71 |
| | |
இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்குமுன்றன் வல்லமையை, அருட்டுறையில் நிறுத்திவிளக் காகுநீ புல்லறிவே. | 72 |
| | |
நல்லவழியிற் சென்று நம்பதவி யெய்தாமல் கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே. | 73 |
| | |
கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே. | 74 |
| | |
வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. | 75 |
| | |
அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும் முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே. | 76 |