பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்323


உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே
     வெகுபேரைப் பார்த்திருந்தேன்.
192
  
இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி
அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே
     அன்றே இருந்தாண்டி.
193
  
அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல்
மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே
     மருவி இருந்தான்டி.
194
  
கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி
எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே
     ஏகமாய் நின்றான்டி.
195
  
தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண்
பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே
     பார்த்திட எல்லாம்பரங்காண்.
196
  
உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
     காரணமாய் வந்தான்டி.
197
  
அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண்
மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே
     மேவி இருந்தான்டி.
198
  
நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண்
பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே
     பரந்த பராபரன்காண்.
199
  
நூலால் உணர்வறியேன் நுண்ணிமையை யான்அறியேன்
பாலாறு சர்க்கரைதேன் - என் ஆத்தாளே
     பார்த்தறிந்த பூரணன்காண்.
200