| மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத் தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்; திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு; ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்; அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே. | | | 4. | பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்; பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்; கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற் காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை; உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! |
|
|
|
|