பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்369


பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
     படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
     வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
     ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
     குணவியவா னானக்காற் சத்திய மாமே.
8
  
சத்தியமே வேணுமடா மனித னானால்
     சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
     நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
     புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
     கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.
9
  

ஞானம் - 2

காப்பு

அறுசீர் விருத்தம்

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.

1
  

உயர் ஞானம்

எண்சீர் விருத்தம்

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
     உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
     பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;

1