ஞானம் - 2 காப்பு அறுசீர் விருத்தம்
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா; மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா; மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.
உயர் ஞானம் எண்சீர் விருத்தம்
உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்; பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;