வண்டரெனை நீச னென்ற வாறுதனை யேயொழித்தேன் விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே | 4 |
| |
வையது லேயுதிக்கு மாண்பர்களே யுங்களுயிர் மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம் அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப் பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே | 5 |
| |
கட்டளைக் கலித்துறை வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந் தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே | 6 |
| |
எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும் பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போகத்தால் கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந் தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே | 7 |
| |
எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல் தன்னா லழிவதுந் தானறியா தெனத் தந்தைவிதி உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண் பந்நா ளனுப்படி கண்டுமிருந் தறியாதவரே | 8 |
| |
யோனிக்குளாசை யொழியா தனித்தியம் உங்களுயிர் தேனிக்குள் இன்பஞ்சுகாதீத மோவருஞ் சிற்றின்பத்தில் ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே | 9 |
| |
நேரிசை வெண்பா இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில் வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல் அற்பக் குழியி லரவ மிருப்பதெனும் கற்பகத்தை யாண்டிடுமோ காண் | 10 |