பண்ணியதோ ரபராதம் குருவுக் கீந்து பராபரத்தைத் தன்தேகம் போலே யெண்ணி அண்ணியதோர் சுகமுடனே துக்க மெல்லாம் ஆர்செய்துந் தனக்குவரம் போலுங் காணே. | 55 |
| | |
காணப்பா விப்படியே தீர்த்தி யானால் கைகடந்த சிவபூசை யென்று சொல்வார் வீணப்பா சகலநூ லென்று தள்ளி விரைந்து நின்ற விரத்தியெல்லாம் விட்டே யோடி ஊணப்பா குருபிறகே நிழலைப் போலே உத்தமனே சச்சிதா னந்த னானாய் ஆணப்பா தேவிக்குப சரித்து வென்று அறிகிறதே சிரவணமென் றறிந்து கொள்ளே. | 56 |
| | |
அறிந்திந்த வேதநிலை விட்டு நீயும் அப்பனே வாசனைப்ர பஞ்சந் தாண்டி மறிந்திந்த புத்ராதி பாசத் தாலே மாயம்வந்து முட்டையிலே கலச்சை யாக்கிச் செறிந்தவதை யடிச்சகவே தாந்தம் பார்த்துச் சீராக நிற்கிறதே செம்மை யாகும் நெறிந்து நின்ற வேதாந்தப் பிரமந் தன்னில் நினைவோடு வருகிறதே யாசை தானே. | 57 |
| | |
ஆசையென்றும் மதியென்றும் அதற்கு நாமம் அப்பனே தாம்பிரம மென்றே ஆசான் நேசையென்ற வுபதேசப் படியே யென்றும் நேராக வேதாந்தப் பொருளென் றெண்ணிப் பூசையென்று மற்றதெல்லாந் தள்ளி விட்டால் உத்தமனே சிவமென்று சொல்லு வார்கள் காசையென்றே என்னென்ன கார்யம் வந்தும் கைவிட்ட துக்கம்வந்துங் கலங்கி டாரே. | 58 |
| | |
கலங்காமல் தாப்பிரம மென்றே யெண்ணிக் கவடற்று நிரந்தரம்வே தாந்தம் பார்த்தே மலங்காமல் நிற்கிறதே விரத மப்பா மகத்தான நேமமென்ற பத்து மாச்சே | |