பக்கம் எண் :

444சித்தர் பாடல்கள்

வேனென்ற பஞ்சகர்த்தாள் மட்டுஞ் சென்றால்
     வேதாந்தி யெனமட்டுஞ் சொல்வார் பாரே.
78
  
பாரப்பா சித்தரென்றார் குளிகை போட்டுப்
     பகுத்தறிவா ருள்மனையைப் பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடுபூ ரணத்தி நின்று
     நேராக வோடம்போல் நீஞ்சி யாடிச்
சேரப்பா திரும்பிவந்து புகுது வார்கள்
     செகத்திலுள்ள சித்தருக்கே அடுத்த வாறு
கூறப்பா பூரணத்தில் நாதந் தாண்டிக்
     கொங்கணர்தாம் சிலம்பொலியைக் கூடி னாரே.
79
  
கூடினார் மூலகுரு பேர னென்று
     கோடானு கோடிசித்த ராடிப் பார்த்தார்
ஆடினா ராடினா ரேற மாட்டார்
     ஆச்சரியங் கொங்கணர்தா மகண்டில் சித்தர்
ஓடினா ரோடினா ரனேகங் கோடி
     ஓங்கிநின்ற காகத்தி லொன்றிப் போட்டுத்
தேடினார் தேடினார் குளிகை தன்னைச்
     சித்தருக்குச் சொருபனிது கிட்டும் வாறே.
80
  
வாறான சுருபமணி யாரின் வர்க்கம்
     மகத்தான தெட்சிணா மூர்த்தி வர்க்கம்
கூறான தொன்றாய்நிட் களங்க மாகிக்
     குவிந்துநின்ற பொருளாகிக் கூறொ ணாத்
தாரான தற்பதமாய் அதுவு மற்றுச்
     சச்சிதா னந்தத்தில் நின்ற ஆசான்
பேரான பிள்ளைகட்கு மணியு மீந்து
     பெரும்பாதை மகாரமென்று பேசி னாரே.
81
  
பேசியதுர்க் கந்தமென்ன வென்று கேட்டால்
     பெருவிரலே நீயாய்மெய் விரலே போத
மாசியது வற்றக்காற் கவிக்கு முன்னே
     மக்களே யிந்தப்பா ரென்று காட்டித்
தேசியது மகாரவித்தை சென்று கூட்டித்
     செப்பாதே மகாரவித்தை குளிர்ந்த ஞானம்