விருதன்றோ சீடருடைப் பாவ மெல்லாம் விளையாட்டுப் போல்வாங்கி விழுந்திட் டாரே. | 94 |
| | |
விழுந்திட்டா ரென்றறிந்து கொங்கண ரேநீர் வெகுபிள்ளை பெற்றீர்முந் நூறு பிள்ளை நழுந்திட்ட பிள்ளையுண்டோ திறந்தா னுண்டோ நலமாக வுமைப்போலா னாரு முண்டோ அழுந்திட்ட சமாதியுண்டோ தியான முண்டோ ஆகாத பிள்ளையுண்டோ சொல்லுஞ் சொல்லும் கொழுந்திட்ட தேவரீர் கருணை யாலே கொஞ்சமறப் பிள்ளையிலே கூடி லேனே. | 95 |
| | |
கூடாத நல்லபுத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள்பூ மியிலே தட்டி நீடாகத் தெண்டனிட்டே அழைத்துக் கொண்டு நிமிடத்திற் குகையினுள்ளே நேர்ந்து போனார் ஆடானா லதுமாட்டு வன்றே சித்தர் ஆனந்த போகமுண்ட ஆண்மை யாண்மை ஓடானா லோட்டுநிர்க் குணத்தின் விதி ஒருமனமாய் நின்றுபுத்தி யுரைப்புத் தானே. | 96 |
| | |
தானென்ற கொங்கணர்போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென்கை லாய மூர்த்தி வானென்ற சுந்தரா னந்தன் விந்து வரவற்ற பூரணமே தாப மென்னக் கானென்ற வெளிகடக்க அறிவோம் நாங்கள் கரையற்ற போகத்தைப் பானஞ் செய்வோம் கோனென்ற கைலாய பூரணமே தேவர் கொள்கிறதோ ருற்பனமும் லயமும் சொல்லே. | 97 |
| | |
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர்போல் அல்லுகிற துவலையைப்போற் பிறப்புண் டாச்சே அதுவோங்கும் விவரமென்ன சொல்வீ ரையா. பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவியங்கே நன்றாய்ப் பாரு | |