நன்றான மௌனத்தைக் கண்டார் முன்னே நலமாகக் கூப்பிடுதல் கண்டி லாரே. | 90 |
| | |
கண்டிலார் மோனத்தி லனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய்க் கேளே அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும் போது அப்பனே மௌனமென்றே தீட்சை கேளு; ஒண்டியாய் வாய்மூடிப் பேச்சு மற்றே ஒருசேரச் சமைத்துண்ணு ஒருபோ தப்பா விண்டிலா தெந்நேரஞ் செபித்தா யானால் விளங்கியதோ ரேழுலட்ச மந்த்ரஞ் சித்தே. | 91 |
| | |
சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந் திறமாக நின்றவர்க்கு மந்த்ரஞ் சித்தி சத்தாகும் வேதமந் திரத்தைப் பாவி சலசலெனப் பசிச்சே விப்பார் கோடி கத்தாதும் நாய்போல கத்தி யென்ன காசுக்கு மாகாது சித்தி யில்லை முத்தான மௌனம்விட்டால் மனம்பா ழாச்சு மோசமிந்த வேதமெல்லாம் பொய்யென் பாரே. | 92 |
| | |
பொய்யென்றே யெண்ணியெண்ணி யுலகங் கெட்டுப் போச்சதனா லேயுகத்தின் பேத மாச்சு; கையென்று யோகத்தில் மௌன முட்டக் கடுஞ்சித்தி யறிவுமட்டுங் கலந்து தாக்கு சையென்ற நிர்த்தமப்பா ஆறிற் காணுஞ் சாதகமாய் மேல்மூலந் தாண்டிக் காணும் மெய்யென்று பிடித்தக்கா லவனே யோகி விரைந்திதனை யறியாட்டால் விருதா மாடே. | 93 |
| | |
விருதன்றோ வுலகத்தில் ஆசா னென்று வேடமிட்டு வேடமிஞ்சி மோடி யேற்றி விருதன்றோ பணம்பறித்துப் பிழைப்பா யையோ வேதாந்த மொன்றுமில்லை சாங்க மென்பார் விருதன்றோ கெடுத்துவிட்டா ருலகத் தோரை வேடமென்று மயக்காலே மயங்கிப் போனார் | |