பக்கம் எண் :

478சித்தர் பாடல்கள்

II. காகபுசுண்டர் உபநிடதம் - 31

காப்பு

எண்சீர் விருத்தம்

ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
     அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
     நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
     துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
     சீவேச ஐக்யமது தெரியுந் தானே.

 
  
                   நூல்

தானென்ற குருவினுப தேசத் தாலே
     தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
     மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
     நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
     குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே.
1
  
பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
     பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
     தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
     உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
     சம்பந்த மில்லாத சாட்சிதானே.
2
  
சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
     சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்