பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்479


சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
     சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
     தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
     சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்.
3
  
சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
     தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
     அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
     சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
     விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்.
4
  
பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
     பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
     கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
     வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
     தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே.
5
  
சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
     தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
     விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
     விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
     தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.
6
  
கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
     கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து