தள்ளடா பிராணாதி வாயு வைந்து சார்வான மனம்புத்தி தானி ரண்டு விள்ளடா பதினேழு தத்து வங்கள் விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத் துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ் சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே. | 7 |
| |
நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள் நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு? காலான கண்டமெனுந் தானத் துள்ளே கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்? நாலான ஆன்மாவே அந்த ரான்மா ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு; தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே. | 8 |
| |
தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத் தானமதே இதயமா ஞான சத்தி வானமதே அகங்காரம் வித்தை யாகில் வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும் கோனிதற்கே ஆனந்த போக மாகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம் கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக் காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே. | 9 |
| |
கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு; தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி விள்ளுமந்தப் படிதானே வேத பாடம் விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே. | 10 |
| |
விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள் விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு; | |