பக்கம் எண் :

484சித்தர் பாடல்கள்

சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
     சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
     சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
     மூலவிந்து களாதீத மொழிய லாமே.
23
  
மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
     மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
     சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
     உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
     விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே.
24
  
விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
     விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
     உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
     நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
     கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
25
  
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
     பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
     சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
     திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
     கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
26
  
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
     கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;