ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார் வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே. | 19 |
| |
ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்; மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்; கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம் குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்; பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே. | 20 |
| |
பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன் பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன் வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன் தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்; சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்; ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்; ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே. | 21 |
| |
யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே. | 22 |
| |
மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா; | |