III. காகபுசுண்டர் காவியம் 33 காப்பு கணபதியே அடியாகி அகில மாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக் குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக் கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப் பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே. |