பக்கம் எண் :

486சித்தர் பாடல்கள்

தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
     சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
     மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
     நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே.
31
  

III. காகபுசுண்டர் காவியம் 33

காப்பு

கணபதியே அடியாகி அகில மாகிக்
     காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக்
குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக்
     குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
     காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை
     பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.

 
  

நூல்

எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்;
     எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
     பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ?
சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு
     சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்;
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ?
     சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே.

1
  
புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப்
     பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
     சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்
பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற்
     பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான்