பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்487


அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன்
     அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே.
2
  
கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
     கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி,
     வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தா னெங்கே?
     குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே?
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே?
     அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே.
3
  
இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
     எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
     சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன
அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி
     அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்;
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
     பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே?
4
  
எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல
     என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே!
     காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே!
சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி
     சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே!
மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே!
     மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே.
5
  
அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா!
     அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால்
பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா!
     போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும்
நெறியாக இவ்வகைநா னறிவே னையா!
     நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்;