புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர் பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார். | 6 |
| |
மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே! வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்; சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும் சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான் அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா! அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம் இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன் இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர். | 7 |
| |
கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா? ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்! காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார் கருவேது நீயறிந்த வாறு மேது! பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே. | 8 |
| |
பரமான பரமகயி லாச வாசா! பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித் தரமான புசுண்டமுனி யந்த வேள சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார் சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான் வரமான வரமளித்த சூரன் வாழ்வே வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே. | 9 |
| |
தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன செகமான செகமுழுது மாண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின் | |