உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே. | 10 |
| |
காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர் எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத் தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார். சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்! பாகமுடன் எட்டான விவரந் தன்னைப் பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே. | 11 |
| |
பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர் பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்! சத்தான சத்துகளு மடங்கும் காலம் சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம் சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார் முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே. | 12 |
| |
முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர் முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்! களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்; கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன? கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார் கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே. | 13 |
| |
வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்; வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும் அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார் அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார் | |