அண்ட முடிமீதி லங்கிர விமதியைக் கண்டுதரி சித்தல் கதி. | 2 |
| |
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி விலகா தடியினிற்பின் வீடு. | 3 |
| |
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி ஒருபொழுது முண்டுநிலை யோர். | 4 |
| |
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு நலமாக நாதனடி நம்பு | 5 |
| |
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத அத்தனரு ளும்புசுண்டன் யான். | 6 |
| |
சொன்னே னறிந்து சுகமா யுலகோருக் கெந்நாளும் வாழ்கவென்றே யான். | 7 |
| |
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண் முதிர்பதயு மாறு. | 8 |
| |
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி ரண்டி லறிவீர் நலம். | 9 |
| |
நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க ஆத்துமத்தி லானந்த மாம். | 10 |
| |
உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார் பல நினைவை விட்டுநீ பார். | 11 |
| |
கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத் தொண்டுசெய்து பெற்ற சுகம். | 12 |
| |
ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து மாதுசிவன் பூசைசெய்து வை. | 13 |
| |
முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித் தப்பாம லுண்டுநிலை சார். | 14 |
| |
யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில் வேகமுடன் கண்டுணரு வீர். | 15 |
| |
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில் மோசம்வா ராகுறள்முற் றும். | 16 |