19. பட்டினச் சித்தர் ஞானம் - 100 காப்பு நேரிசை வெண்பா | |
| |
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி வெண்பாவாய் நூறும் விளம்பவே - பண்பாக் ககனப் பதமுறவக் கன்ம மருகக் ககனகதிர் வேல்முருகன் காப்பு. | 1 |
| |
நெஞ்சுட னே தான்புலம்பி நீலநிறத்தாளீன்ற குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் - கஞ்சமுடன் காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன் பூமிதனில் வாழ்வ ரெப்போதும். | 2 |
| |
எப்போதிறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம் எப்போது எழுத்திரெண்டை ஏத்துவோம் - எப்போது காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே ஏமன்வலை அறுப்ப தென்று. | 3 |
| |
என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய் நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் - உண்டுறங்கித் தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண் ஆசைவிந்தே ஆவுடையாள். | 4 |
| |
ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே கோவுடையாள் நின்றதினம் கூடிய - பூவுடையாள் கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில் இட்டமுடன் நெஞ்சேஇரு. | 5 |
| |
இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே பெருகுசினங்கொண்டு பினத்தாதே - மருவுமலக் | |