கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று. | 6 |
| |
ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே சென்று மயங்கித் திரியாதே - நின்ற நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய புலைவினையும் மாற்றும் பொருள். | 7 |
| |
பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே இருளுறவை நம்பி இராதே - பொருளுறவு கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக் கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று. | 8 |
| |
காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி மாற்றி இனிப்பிறக்க வாராதே - ஏற்றபடி ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை நாடியிருப் போம்மனமே நாம். | 9 |
| |
நானென தென்றுவினை நாடி அலையாதே தானவனே யென்று தரியாய்நீ - ஏன்மனமே வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக் காணாவல் கொள்ளாய் கருத்து. | 10 |
| |
கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே விரித்துப் பலவேடம் மேவாய் - பெருத்ததொரு சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே அஞ்செழுத் தாலொன் பது. | 11 |
| |
ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன் சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத் துட்பொருளே மெய்யென் றுணர். | 12 |
| |
மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே - செய்யதோர் ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற காணும் பொருளுரைக்குங் கல். | 13 |