கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப் பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம் செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை கலக்கமறப் பார்த்தே கரை. | 14 |
| |
கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து நேசமுள்ள பாக்கியத்தில் நில். | 15 |
| |
பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே தாக்குமிடி வந்தால் சலியாதே - நோக்குமே ஒருவத்தன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே கருத்தாலே நின்று கருது. | 16 |
| |
கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி உருகாதே நெஞ்சே ஒருவன் - இருகாலைக் காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண் போற்றிப்பார், ஒத்தநல் பொன். | 17 |
| |
பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச் சொன்னாசை யென்றறிந்து சோராதே - எந்நாளும் ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும் பாசமது நெஞ்சே பரிந்து. | 18 |
| |
பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே அறிந்துருகிச் சிந்தித் தலையேல் - வருந்தி நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே உடைந்திடு முன்னே உடம்பு. | 19 |
| |
உடம்பழிந்த பின்மனமே ஒன்றுங் கிடையாது உடம்பழியு முன்கண் டுணராதே - உடம்பிற் கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப் பருகு கலைமதியப் பால். | 20 |
| |
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் காலிடுக்கை நத்திக் கரையாதே - கோலெடுத்து | |