புத்தியும் வித்தையுந் தந்தருள் பாதனைப் போத மயமாக்கி சித்தியும் பத்தியும் கண்டந்த நாதனைத் தேகல யத்துள்வைத்து. | 3 |
| |
சித்தம் பலத்திலச் சிதம்பர வித்தையைத் தேறித் தெளிந்தேதான் சத்தம் பிறந்திட வாசி அறிந்து தானும் நடந்தேனே. | 4 |
| |
நத்தும் உலகத்தோர் சித்தை அறிந்திட நல்ல ததியெனவே தத்துவ மான எழுத்தஞ்சு னாலேதான்வரை கீறினனே. | 5 |
| |
அங்கி பொருந்தின வீட்டுக்கோர் அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக தங்கி இருந்திடு மந்திர விஞ்சையைத் தான்கண்டு பேறும்பெற்றேன். | 6 |
| |
அங்கங்கே மாறினால் அட்டகர் மத்தொழில் ஆடும் இதுதானும் சங்கை யுடனே துகையைப் பெருக்கித் தான்வரை கீறிடுவாய். | 7 |
| |
தானாயிருக்கும் பிரமத்தின் தன்செயல் தன்னை அறிந்தாக்கால் வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ? | 8 |
| |
அருவு முருவும் திருவும் பலவுமாய் ஆதிசி தம்பரத்தைக் கருவும் குருவும் கண்டறிந் தோர்கள் கையா லெழுதுவரோ? | 9 |
| |
தானந்த மான தத்துவங் கண்டோர்கள் தானேதா னெவ்வுயிர்க்கும் | |