பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்557


     ‘காயமே  இது  பொய்யடா, வெறும்  காற்றடைத்த  பையடா’ என்றும்,
‘ஊத்தைச்  சடலமடி   உப்பிருந்த  பாண்டமடி’   என்றும்  கூறும்  சித்தர்
வாக்கியத்தை,

“காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது ஞானம்மா
ஊத்தச் சடலமிது
உப்பிலாப் பொய்க்கூடு

     இப்பாடல்  ‘கசமாலம்’  என்ற  சென்னைத்  தமிழ் வழங்குவதிலிருந்து
இவர்  சென்னைப்  பகுதியில் நடமாடிய  பிற்காலச் சித்தராய் இருக்கலாமோ
என்றும்  எண்ணத்  தோன்றுகிறது.  அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்
கீசரிலும் இவர் மாறுபட்ட வேறு சித்தராய் இருத்தல் வேண்டும்.

     20 கண்ணிகள் ஒரு பாடலும்,  45 பாடல்களில் ஒரு முப்பூச் சுண்ணச்
செயநீர் பாடலும் இவர் இயற்றியதாகக் காணப்படுகிறது. ஆயினும், இரண்டின்
நடையையும்   ஒப்புநோக்கக்  கால   வேறுபாடு  தெள்ளெனப்  புலப்படும்.
ஆகவே,   முப்பூச்   சுண்ணச்  செயநீர்  பாடிய  புண்ணாக்குச்  சித்தரும்,
மனோன்மணியாளைப்  பாடிய புண்ணாக்குச் சித்தரும்  வேறு  வேறானவர்
என்பது   ஏற்பதற்குரியது.  இப்பாடல்  தொகுதி  பிற்காலப்  புண்ணாக்குச்
சித்தருடையது.

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
     தாவித்திரந்தேளே - ஞானம்மா
     சரணம் சரணம் என்றே.
1
  
அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
     மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
     விலையிலா ரத்தினமடி
2
  
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
     சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
     தானுயிரு நிற்பதடி.
3