பக்கம் எண் :

572சித்தர் பாடல்கள்

வித்தாரம் உண்டான
     விபரம் அறிந்துகொள்ளே.
கிளியே
 
4
   
சத்தாதி வாக்காதி
     தனுகர ணங்கட்கெல்லாம்
வித்தான மூலமதைக்
     மேவித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே
5
   
சத்தியில் உண்டான
     சதாசிவ மானதென்று
நித்தியம் நீ அறிந்து
     நின்று தெளிவாயே.
கிளியே

கிளியே
6
   
அச்சிவ மானதிலே
     அண்டபிண் டங்களெல்லாம்
உச்சித மாய் உதித்தே
     உண்மை அறிந்துகொள்ளே.
கிளியே

கிளியே
7
   
நாலு வகையோனி
     ஏழுவகைத் தோற்றத்
தாலு மகரசரம்
     தத்துவம் உற்றதடி.
கிளியே

கிளியே
8
   
அகாரம் உகாரம் ரெண்டும்
     யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம்
     தேறித் தெளிவாயே.
கிளியே

கிளியே
9
   
சத்துச்சித் தானந்தம்
     தத்துவஞ் சொல்லுகிறேன்
நித்தியா னந்தமதை
     வித்தாரம் செய்யுகிறேன்.
கிளியே

கிளியே
10
   
சாமி அருள்வேணும்
     சாதனை நால்வேணும்
வாமி தயைவேணும்
     வத்தவனாக வேணும்.
கிளியே

கிளியே
11