வித்தாரம் உண்டான விபரம் அறிந்துகொள்ளே. | கிளியே | 4 |
| | |
சத்தாதி வாக்காதி தனுகர ணங்கட்கெல்லாம் வித்தான மூலமதைக் மேவித் தெளிந்துகொள்ளே. | கிளியே கிளியே | 5 |
| | |
சத்தியில் உண்டான சதாசிவ மானதென்று நித்தியம் நீ அறிந்து நின்று தெளிவாயே. | கிளியே கிளியே | 6 |
| | |
அச்சிவ மானதிலே அண்டபிண் டங்களெல்லாம் உச்சித மாய் உதித்தே உண்மை அறிந்துகொள்ளே. | கிளியே கிளியே | 7 |
| | |
நாலு வகையோனி ஏழுவகைத் தோற்றத் தாலு மகரசரம் தத்துவம் உற்றதடி. | கிளியே கிளியே | 8 |
| | |
அகாரம் உகாரம் ரெண்டும் யகாரம் உருவாச்சு சிகாரம் வந்தவிதம் தேறித் தெளிவாயே. | கிளியே கிளியே | 9 |
| | |
சத்துச்சித் தானந்தம் தத்துவஞ் சொல்லுகிறேன் நித்தியா னந்தமதை வித்தாரம் செய்யுகிறேன். | கிளியே கிளியே | 10 |
| | |
சாமி அருள்வேணும் சாதனை நால்வேணும் வாமி தயைவேணும் வத்தவனாக வேணும். | கிளியே கிளியே | 11 |