அஞ்சு புஞ்சகோசம் ஆராய்ந்து பார்க்கவேணும் நெஞ்சந்தெளிய வேணும் நீயேநா னாகவேணும். | கிளியே கிளியே | 12 |
| | |
ஆசாபா சங்களையே லேசமும் எண்ணாதே வாசனை மூன்றினாலே மோசமும் போகாதே. | கிளியே கிளியே | 13 |
| | |
மானாபி மானமற்று தானென்று அகமும்அற்று நானப்பிர பஞ்சமற்று நாதமயத் தைப்பற்ற | கிளியே கிளியே | 14 |
| | |
பத்தரை மாற்றுத்தங்கம் சுத்த வெளியாகும் எத்திசை பார்த்தாலும் தத்துவ மாயிருக்கும். | கிளியே கிளியே | 15 |
| | |
மூலா தாரமுண்டு முக்கோண வட்டமுண்டு வாலை கணேசனுண்டு வல்லபை சத்தியுண்டு. | கிளியே கிளியே | 16 |
| | |
சுவாதிட் டானமுண்டு சுத்தபிரமாவுமுண்டு உவாதினி வாதிக்கெல்லாம் உற்றவர் கண்டுகொள்ளே. | கிளியே கிளியே | 17 |
| | |
மேலே மணிபூரகம் விட்டுணுக் குற்றவிடம் காலா தீதத்துக்கும் கருத்த ரவர்தாமே. | கிளியே கிளியே | 18 |
| | |
பாரு மனாகிதத்தில் பார்வதி நாதரங்கே | கிளியே | |