பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்573


அஞ்சு புஞ்சகோசம்
     ஆராய்ந்து பார்க்கவேணும்
நெஞ்சந்தெளிய வேணும்
     நீயேநா னாகவேணும்.
கிளியே

கிளியே
12
  
ஆசாபா சங்களையே
     லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே
     மோசமும் போகாதே.
கிளியே

கிளியே
13
  
மானாபி மானமற்று
     தானென்று அகமும்அற்று
நானப்பிர பஞ்சமற்று
     நாதமயத் தைப்பற்ற
கிளியே

கிளியே
14
  
பத்தரை மாற்றுத்தங்கம்
     சுத்த வெளியாகும்
எத்திசை பார்த்தாலும்
     தத்துவ மாயிருக்கும்.
கிளியே

கிளியே
15
  
மூலா தாரமுண்டு
     முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
     வல்லபை சத்தியுண்டு.
கிளியே

கிளியே
16
  
சுவாதிட் டானமுண்டு
     சுத்தபிரமாவுமுண்டு
உவாதினி வாதிக்கெல்லாம்
     உற்றவர் கண்டுகொள்ளே.
கிளியே

கிளியே
17
  
மேலே மணிபூரகம்
     விட்டுணுக் குற்றவிடம்
காலா தீதத்துக்கும்
     கருத்த ரவர்தாமே.
கிளியே

கிளியே
18
  
பாரு மனாகிதத்தில்
     பார்வதி நாதரங்கே
கிளியே