பக்கம் எண் :

574சித்தர் பாடல்கள்

சேருந் தலம் இதென்று
     தெரிசித்துக் கொள்வாயே.
கிளியே
 
19
  
கண்டம் விசுத்தியல்லோ
     கஞ்சம் பதினாறு
அண்டபிண் டங்களெல்லாம்
     ஆஞ்ஞை மகேசனுக்கு.
கிளியே

கிளியே
20
  
இரண்டு கண்நடுவே
     இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால்
     தேறித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே
21
  
ஆயிரத்து எட்டிதழில்
     அமர்ந்த சதாசிவத்தை
நேயம தாகவேதான்
     நிதம்பணிந்து ஏற்றிக்கொள்ளே.
கிளியே

கிளியே
22
  
ஈதோர் குணமாச்சு
     இரண்டாம் குணந்தனையும்
மூதோர் மொழியெனவே
     முற்றிலும் எண்ணுவையே.
கிளியே

கிளியே
23
  
சாதனம் நாலுவகை
     சற்று நிதானமாய்
போத மிகுதியினால்
     புத்திஎன் றேஉணர்வாய்.
கிளியே

கிளியே
24
  
சமாதி ஆறுகுணம்
     சாமா வகய மலவே
உமாம கேசனுக்கே
     உற்றதுஎன்றே தெளிவாய்.
கிளியே

கிளியே
25
  
உற்ற சமந்தானும்
     ஒன்றிவைக் கும்பின்னும்
மற்றுள தமகுணத்தை
     மாற்றல் அரிதலவே.
கிளியே

கிளியே
26