சேருந் தலம் இதென்று தெரிசித்துக் கொள்வாயே. | கிளியே | 19 |
| | |
கண்டம் விசுத்தியல்லோ கஞ்சம் பதினாறு அண்டபிண் டங்களெல்லாம் ஆஞ்ஞை மகேசனுக்கு. | கிளியே கிளியே | 20 |
| | |
இரண்டு கண்நடுவே இருக்கும் மயேசுரனை திரண்ட சிந்தையினால் தேறித் தெளிந்துகொள்ளே. | கிளியே கிளியே | 21 |
| | |
ஆயிரத்து எட்டிதழில் அமர்ந்த சதாசிவத்தை நேயம தாகவேதான் நிதம்பணிந்து ஏற்றிக்கொள்ளே. | கிளியே கிளியே | 22 |
| | |
ஈதோர் குணமாச்சு இரண்டாம் குணந்தனையும் மூதோர் மொழியெனவே முற்றிலும் எண்ணுவையே. | கிளியே கிளியே | 23 |
| | |
சாதனம் நாலுவகை சற்று நிதானமாய் போத மிகுதியினால் புத்திஎன் றேஉணர்வாய். | கிளியே கிளியே | 24 |
| | |
சமாதி ஆறுகுணம் சாமா வகய மலவே உமாம கேசனுக்கே உற்றதுஎன்றே தெளிவாய். | கிளியே கிளியே | 25 |
| | |
உற்ற சமந்தானும் ஒன்றிவைக் கும்பின்னும் மற்றுள தமகுணத்தை மாற்றல் அரிதலவே. | கிளியே கிளியே | 26 |