விடல் சகித்தல்தனை மேன்மைய தாகக்கொண்டு தொடர்ச மாதானம் தொந்தம் நமக்காமே. | கிளியே கிளியே | 27 |
| | |
சிரத்தை எப்பொருட்டும் தீவிரம் ஆகுமதே பரத்தை தானடைய பற்றொன்றும் இல்லைகண்டாய். | கிளியே கிளியே | 28 |
| | |
பத்தியை விட்டுவிட்டுக் பாவனையைக் கடந்து அத்துவி தானத்தைக் அனுபவித்து உய்வாயே. | கிளியே கிளியே | 29 |
| | |
பெண்ணாசை பொன்னாசை பூமியின் மீதாசை மண்ணாசை எண்ணாதே வாசிஎன் னால்அறியே | கிளியே கிளியே | 30 |
| | |
தேகம் தேகிரெண்டு தேகம்பொய் தேகிமெய்யே மோகாந்தம் விட்டாக்கால் முத்தி யடைவாயே. | கிளியே கிளியே | 31 |
| | |
பாவ அபானமற்று பரத்தினுடன் பொருந்திச் சுவானுப வந்தனிலே சொக்கிநீ வாழ்வாயே. | கிளியே கிளியே | 32 |