பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்575


விடல் சகித்தல்தனை
     மேன்மைய தாகக்கொண்டு
தொடர்ச மாதானம்
     தொந்தம் நமக்காமே.
கிளியே

கிளியே
27
  
சிரத்தை எப்பொருட்டும்
     தீவிரம் ஆகுமதே
பரத்தை தானடைய
     பற்றொன்றும் இல்லைகண்டாய்.
கிளியே

கிளியே
28
  
பத்தியை விட்டுவிட்டுக்
     பாவனையைக் கடந்து
அத்துவி தானத்தைக்
     அனுபவித்து உய்வாயே.
கிளியே

கிளியே
29
  
பெண்ணாசை பொன்னாசை
     பூமியின் மீதாசை
மண்ணாசை எண்ணாதே
     வாசிஎன் னால்அறியே
கிளியே

கிளியே
30
  
தேகம் தேகிரெண்டு
     தேகம்பொய் தேகிமெய்யே
மோகாந்தம் விட்டாக்கால்
     முத்தி யடைவாயே.
கிளியே

கிளியே
31
  
பாவ அபானமற்று
     பரத்தினுடன் பொருந்திச்
சுவானுப வந்தனிலே
     சொக்கிநீ வாழ்வாயே.
கிளியே

கிளியே
32