பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 57

வாழ்வின் ஒளிப்பறவை - தன் 
       வண்ணச் சிறகுகளை
ஏழ்கடல், வான்வெளி, மண் - புவி 
       எங்கும் விரிக்குதடா!

கற்பனை மீறுதடா - இன்பக் 
       கனவும் வளருதடா!
பொற்புறு மாந்தரெலாம் - ஒரு 
       புத்துலகம் அமைப்பார்!

சாந்த உலகமதாம் - அது, 
       தன்னுடை வாசலிலே
ஏந்திப் பறக்கவிடும் - கொடி 
       இன்பச் சமாதானமாம்!

அந்தக் கொடிதனையே - மக்கள் 
       யாவரும் ஏந்திடுவார்!
எந்தப் புயல்வரினும் - அதை 
       என்றைக்கும் காத்திடுவார்!

ரத்தக் கறைபடுத்தி - அதை 
       நாசம் புரிந்திடநீ 
யுத்தம் தொடுக்க வந்தாய் - காலன் 
       உன்னைப் பிடிக்கவந்தான்!

போய்விடு போய்விடுநீ - ஹிட்லர் 
       போய்விட்ட பாழுலகம்!போய்விடு 
போய்விடுநீ - உன்னைப் 
       பூமி உதறியது!

குழந்தை வளர்ந்திடுவான் - அன்னை 
       குடும்பம் வளர்த்திடுவாள்!
பழகுதொழில் வளரும் - மக்கள் 
       பாரில் இனிதிருப்பார்!