மரமும்,மாடும்
"மரமே, மாடே" என்றெல்லாம்
மனிதர் திட்டிக் கொள்கின்றார்.
மரமும் மாடும் உதவுதல்போல்
மனிதர் எங்கே உதவுகிறார்?
நிழலைத் தந்து களைப்பெல்லாம்
நீக்குதல் அந்த மரமாகும்.
பழத்தைத் தந்து உடலுக்கே
பலத்தைத் தருவது மரமாகும்.
விறகைத் தந்து அரிசியினை
வேகச் செய்வது மரமாகும்.
பறவை கூடு கட்டிஇனம்
பரவச் செய்வது மரமாகும்.
வயலை உழுது பயிர்களையே
வளரச் செய்வது மாடாகும்.
வெயிலில், மழையில் மனிதர்களை
விரைந்து இழுப்பது மாடாகும்.
|