பக்கம் எண் :

மலரும் உள்ளம்105

தீய வழியில் செல்கையில்
    திருத்த முயற்சி செய்திடும்
தூய நண்பன் அவனைநீ
    துரத்தி யடித்தல் கெடுதலாம்.

செவிடர், குருடர், முடவர்க்கு
    செய்வாய் நல்ல உதவிகள்.
அவரைக் கேலி செய்வதோ
    அதிகக் கெட்ட செய்கையாம்.