ஒருநாள் அந்த வழியினிலே,
உள்ள மைல்கல் ஒன்றிற்கு,
வெள்ளை யடித்து இருந்ததனால்
வெள்ளை முயல்போல் தோன்றியதே!
முருகன் அதனை முயலெனவே
முட்டாள் தனமாய் எண்ணிவிட்டான்.
விட்டான் காரை அதன்மேலே
"பட்"டெனக் கல்லில் மோதியதே!
காரின் முன்னால் இருந்திட்ட
கண்ணா டியுமே நொறுங்கியதே.
பட்டது காயம், பலமாக.
பல்லில் இரண்டு போயினவே.
“முயலைக் கொன்று தின்றிட்ட
முன்னம் பற்கள் உடைந்தனவே!
ஐயோ, உயிரைக் கொன்றேனே !
அதனால் கடவுள் தண்டித்தார்”
என்றே எண்ணி முருகனுமே
இளகிய உள்ளம் பெற்றனனே.
|