பக்கம் எண் :

மலரும் உள்ளம்137

மானின் விடுதலை

பையன் :

புள்ளி மானே, கோபம்நீ
கொள்வ தேனோ, கூறுவாய்?

மான் :

கட்ட விழ்த்து விட்டிடு.
காட்டை நோக்கிப் போகிறேன்.

பையன் :

ஒருவி னாடி கூடநான்
உன்னை விட்டி ருப்பேனோ?

மான் :

உடனே நீயும் புறப்படு.
ஒன்றாய்க் காடு செல்லலாம்.