பையன் :
காட்டை நோக்கிப் போகவா?
கல்லும் முள்ளும் குத்துமே!
அம்மா, அப்பா, பாட்டியை
ஐயோ, விட்டு வருவதோ?
இருட்டிப் போனால் விளக்குமே
இல்லை அந்தக் காட்டிலே.
சிங்கம், கரடி, புலியுமே
சீறி வந்து கடிக்குமே.
மான் :
அப்ப டித்தான் எனக்குமே
அதிகக் கஷ்டம் இல்லையோ?
சுற்றத் தார்கள் வருவரோ?
துள்ளிச் சுற்ற முடியுமோ?
ஆசை கொண்ட உணவையும்
அடைந்து தின்னக் கூடுமோ?
கழுத்து நோக என்னையார்
காட்டில் கட்டிப் போடுவார்?
*
இதனைக் கேட்ட அவன்மனம்
இளகிப் போச்சு மெத்தவும்.
“ஐயோ, பாவம், ஐயையோ!
அவிழ்த்து விட்டேன், ஓடிடு”
|