பக்கம் எண் :

மலரும் உள்ளம்143

“வெள்ளைக் கன்றைத் தேடிக் கொண்டே
    உள்ளே வந்திட்டேன்.
வெள்ளை யாக உறியில் ஏதோ
    இருக்கக் கண்டிட்டேன்.
உள்ளே கையை விட்ட பிறகே
    வெண்ணெய் என்று நான்
உணர்ந்தேன்” என்று கூறிக் கண்ணன்
    ஓடிப் போய்விட்டான்!