உற்சவம் ஒன்று பக்கத்து
ஊரில் நடந்தது, கண்டிடவே,
உற்சா கத்துடன் எல்லோரும்
ஒன்றாய்க் கூடிச் சென்றனரே.
தள்ளா வயது ஆனதனால்
தந்தை மட்டும் போகவில்லை.
கள்ளன் ஒருவன் இரவினிலே
கதவைத் திறந்துள் ளேசென்றான்.
பந்தம் ஒன்றை வாயினிலே
பலமாய் வைத்துத் தூணுடனே,
தந்தை தன்னைக் கட்டியபின்
தங்கம் வெள்ளி திருடினனே.
"சட்"டென அங்கே நாய்வந்து
தாக்கிய தந்தத் திருடனையே.
வெட்டிய காயம் போலவேதான்
மேலெலாம் புண்கள் ஆயினவே.
குரைத்ததன் சத்தம் கேட்டதுமே
கூடியே ஊரார் வந்தனரே.
விறைப்புடன் ஓடிய திருடனையே
விரட்டிப் பிடித்து உதைத்தனரே.
|