ஏமாந் தேநீ போகாதே!
எழுந்து உள்ளே பார்த்திடுவாய்”
என்றே கூறிட, அத்திருடன்
எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே.
விரைவில் சென்று சரஸ்வதியும்
"வெடுக்" கெனக் கதவைப் பூட்டினளே!
திருடர் நால்வரும் அறைக்குள்ளே
"திருதிரு" எனவே விழித்தனரே!
சரஸ்வதி தெருவில் வந்தனளே;
சத்தம் போட்டுக் கத்தினளே.
“ஐயோ! திருடன்! ஐயையோ!
அபாய“ மெனவே அலறினளே.
ஊரார் எல்லாம் தடியுடனே
ஒன்றாய்க் கூடி வந்தனரே.
கதவைத் திறந்து திருடர்களைக்
கயிற்றால் கட்டி இழுத்தனரே.
|